திருகோணமலையில் நிலவுகின்ற சீரற்ற வானிலை காரணமாக 237 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக திருகோணமலை மாவட்ட உதவிப் பணிப்பாளர் தெரிவித்தார்.
யான் ஓயா நீர் தேக்கத்தின் வான் கதவு ஒன்று இன்று திறக்கப்பட உள்ளமையினால் மீன் பிடிப்பதற்காக அப்பகுதிக்கு செல்லும் மீனவர்களை செல்ல வேண்டாமெனவும், வயல் பிரதேசங்களுக்கு செல்லும் விவசாயிகள் மிகவும் அவதானமாக இருக்குமாறும் யான் ஒயா திட்டத்தின் பொறியியலாளர் பிரதீப் வெலிவிட பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
திருகோணமலை மாவட்டத்தில் அனர்த்தம் தொடர்பில் பொதுமக்களுக்கு சேவைகளை வழங்குவதற்காக படையினரை சேவையில் ஈடுபடுத்தியுள்ளதாகவும் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ உதவி பணிப்பாளர் குகதாஸ் சுகுணதாஸ் மேலும் குறிப்பிட்டார்.