நாட்டில் மேலும் சில பிரதேசங்கள் நாளை காலை 8 மணி முதல் தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனை இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
பொரளை காவல்துறை பிரிவுக்குட்பட்ட கோதமிபுர தொடர்மாடி குடியிருப்பு, கோதமிபுர 24வது தோட்டம், கோதமிபுர 78வது தோட்டம், வேலுவன வீதி (தெமட்டகொட) ஆகிய பிரதேசங்களும், பூகொட காவல்துறை பிரிவுக்குட்பட்ட குமாரிமுல்ல கிராமசேவக பிரிவும், மினுவாங்கொடை காவல்துறை பிரிவுக்குட்பட்ட கல்ஒலுவ பிரதேசத்தின் ஜும்மா மஸ்ஜித் வீதி, ஹித்ரா வீதி, புதிய வீதி, அகரகொட ஆகிய பிரதேசங்களும், அம்பலாந்தோட்டை பிரதேச சபை பிரிவுக்குட்பட்ட பொலானை தெற்கு பிரதேசமும் இவ்வாறு தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிக்கப்படுகின்றன.