சந்தையினை புனரமைத்து தருமாறு கோரிக்கை

gota with mahinda
gota with mahinda

கல்முனை பொதுச்சந்தையினை புனரமைத்து தருமாறு கல்முனை மக்கள் அரசாங்கத்திடம் கோரிக்கை ஒன்றை முன்வைத்துள்ளனர்.

அம்பாறை மாவட்டம் கல்முனை மாநகர சபைக்குட்பட்ட கல்முனை பொதுச்சந்தை வெள்ளத்தில் மூழ்கியுள்ளதுடன் பலத்த காற்று வீசுகின்ற வேளையில் கட்டிடம் இடிந்து விழக்கூடிய சாத்தியம் காணப்படுவதாக பிரதேச மக்கள் தெரிவித்து வருகின்றனர்.

பல முஸ்லிம் பிரதிநிதிகள் அரசாங்கத்தில் பல்வேறு பதவிகளை வகித்த போதும் கல்முனை சந்தையை புதிதாக நிர்மாணிக்க முடியாமல் போனதாகவும் மக்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.

இந்நிலையில் கல்முனை சந்தையினை புனர்நிர்மாணம் செய்து தருமாறு நாட்டின் ஜனாதிபதி மற்றும் பிரதமரிடம் கோரிக்கை ஒன்றினை முன்வைத்துள்ளனர்.