மேலும் 423 இலங்கையர்கள் நாடு திரும்பினர்

திரும்பினர் 3
திரும்பினர் 3

கொரோனா தொற்று காரணமாக வெளிநாடுகளில் சிக்கியிருந்த மேலும் 423 இலங்கையர்கள் நாடு திரும்பியுள்ளனர்.

இன்று காலை 8.30 மணியுடன் நிறைவடைந்த கடந்த 24 மணித்தியாலங்களில் 9 விமான சேவைகள் மூலம் இவர்கள் நாட்டிற்கு அழைத்துவரப்பட்டுள்ளதாக எமது விமான நிலைய செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார்.

இவர்களில் சவூதி அரேபியாவிலிருந்து 75 பேரும், கட்டார் இராச்சியத்திலிருந்து 45 பேரும் வருகை தந்துள்ளனர்.

இதேவேளை, மேலும் 11 விமான சேவைகள் மூலம் 495 பேர் தொழில் நிமித்தம் வெளிநாடு நோக்கி பயணமாகியிருப்பதாக தொிவிக்கப்படுகின்றது.