இலங்கையில் ஆரம்பிக்கப்படவுள்ள இரண்டாவது சூரியசக்தி பூங்கா

download 1 6
download 1 6

இலங்கையில் எரிசக்தி செயன்முறையை முன்னெடுத்துச் செல்லும்போது, புதுப்பிக்கத்தக்க எரிசக்தியை மையமாகக்கொண்டு, நாட்டில் நிர்மாணிக்கப்படவுள்ள இரண்டாவது சூரியசக்தி பூங்கா திட்டம் அடுத்த மாதம் ஆரம்பிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சூரிய சக்தி, காற்று மற்றும் நீர்மின் மேம்பாட்டுத்துறை இராஜாங்க அமைச்சர் துமிந்த திஸாநாயக்க இதனைத் தெரிவித்துள்ளார்.

சியம்பலாண்டுவ பகுதியில் இந்தப் பூங்கா அமைக்கப்படவுள்ளது.

2022 டிசம்பர் மாதத்தில் இந்த எரிசக்தி பூங்கா மூலம், தேசிய மின்சார கட்டமைப்புக்கு 100 மெகாவோட் மின்சாரத்தைப் பெற்றுக்கொள்ள எதிர்பார்ப்பதாக இராஜாங்க அமைச்சர் துமிந்த திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.