பல்கலை பீடங்களாக தரமுயர்த்தப்படவுள்ள கல்வியியற் கல்லூரிகள்

 னஉளைழை
னஉளைழை

தேசிய கல்வியற் கல்லூரிகளை பல்கலைகழகங்களின் பீடங்களாக மாற்றி அங்கு கல்வியைத் தொடரும் ஆசிரியர் மாணவர்களை பட்டதாரிகளாக தரம் உயர்த்துவதற்கான பரிந்துரைக்கு அமைச்சரவை கொள்கையளவில் ஒப்புதல் வழங்கியுள்ளது.

நேற்றைய அமைச்சரவைக் கூட்டத்தில் இதற்கான ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.

அமைச்சரவைத் தீர்மானத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது;

ஜனாதிபதியினால் சமர்ப்பிக்கப்பட்ட ‘சுபீட்ச தொலைநோக்கு’ என்ற கொள்கை பிரகடனத்தில் இலங்கையில் அனைத்து ஆசிரியர் சமூகத்தையும் பட்டதாரிகளாக தரம் உயர்த்துவதற்கான வேலைத்திட்டம் ஒன்றை நடைமுறைப்படுத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.

இந்த வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்காக கல்விசார் மற்றும் உடனடி பணிகளை நிறைவேற்றுவதற்காக கல்வி மற்றும் உயர் கல்வி துறையில் பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் சிறப்புக் குழு ஒன்றை நியமிப்பதற்கு அமைச்சரவையினால் ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.