மார்ச் 12 இயக்கத்தினால் ஜனாதிபதிக்கு பாராட்டு

rohana
rohana

பதவியேற்றதன் பின்னர் ஜனாதிபதியால் இதுவரை எடுக்கப்பட்ட நடவடிக்கைகளை பாராட்டத்தக்க வகையில் உள்ளதாக மார்ச் 12 இயக்கம் தெரிவித்துள்ளது.

கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அதன் ஏற்பாட்டாளர் ரோஹண ஹெட்டியாராச்சி இதனை தெரிவித்தார்.

அங்கு தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர்,

ஜனாதிபதியின் செயற்பாடுகள் தொடர்பில் மதிபீடுகளை செய்ததற்கிணங்க அரசியல்வாதி இல்லாத ஒருவர் அரச தலைவராக நியமிக்கப்பட்டமையின் ஊடாக இந்த நிலை ஏற்பட்டதாக நாம் நம்புகிறோம் தெரிவித்துள்ளார். எதிர்வரும் தேர்தலின் பின்னர் கடந்த காலத்தில் பல்வேறு குற்றச்சாட்டுகளுக்கு உள்ளானவர்களுக்கும் அமைச்சுப் பதவி வழங்கப்பட்டுள்ளமை தொடர்பில் தீர்மானம் எடுப்பதாகவும் இதன் போது தெரிவித்துள்ளார்.