மன்னாரில் கிரவல் மண்ணிலிருந்து மீண்டது கைக்குண்டு!

IMG 0746
IMG 0746

மன்னார் மாவட்டம் ஓலைத் தொடுவாய் பகுதியில் வீதி அபிவிருத்திக்கு என கொட்டப்பட்ட கிரவல் மண்ணிலிருந்து சந்தேகத்திற்கு இடமான கைக்குண்டு ஒன்று இன்று மாலை மீட்கப்பட்டுள்ளது.

குறித்த வீதி அமைப்பதற்காக செட்டிகுளம் பகுதியிலிருந்து கொண்டு வரப்பட்டு ஓலைத்தொடுவாய் பகுதியில் கொட்டப்பட்ட குறித்த கிரவல் வகை மண்ணிலிருந்தே குறித்த கைக்குண்டு மீட்கப்பட்டுள்ளது.

குறித்த கிரவல் மண்ணை இன்று புதன்கிழமை மாலை பரவும் பணியில் ஈடுபட்ட ஊழியர்கள் குறித்த கைக்குண்டு காணப்பட்டதை அவதானித்துள்ளனர்.

உடனடியாக மன்னார் பொலிஸாருக்கு வழங்கிய தகவலின் அடிப்படையில் குறித்த பகுதியில் காணப்பட்ட கைக்குண்டு அடையாளப்படுத்தப்பட்டதுடன் , குறித்த பகுதிக்கு தற்காலிக பொலிஸ் பாதுகாப்பும் வழங்கப்பட்டுள்ளது.

மேலதிக விசாரணைகளை மன்னார் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.