வலி.மேற்கு சங்கானை கலாசார மத்திய நிலையத்தில் 2021 ஆம் ஆண்டிற்கான இலவச கலை, வாத்தியங்கள் மற்றும் மொழி சார்ந்த பாடநெறி வகுப்புக்கள் ஆரம்பமாகவுள்ள நிலையில் அவற்றைக் கற்பதற்கான மாணவர்களை விண்ணப்பிக்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
கர்நாடக சங்கீதம், பரதநாட்டியம், சித்திரம், மிருதங்கம், ஆங்கிலம், சிங்களம், நாடகமும் அரங்கியலும் ஆகிய பாடநெறிகள் இலவசமாக கற்பிக்கப்படவுள்ளன.
பாடநெறிகளைக் கற்க விரும்பும் மாணவர்கள் எதிர்வரும் 27 ஆம் திகதிக்கு முன்னர், திங்கட்கிழமை தவிர்ந்த ஏனைய நாட்களில், சங்கானை பட்டினசபை வீதியில் உள்ள கலாசார மத்திய நிலையத்தில் படிவங்களைப் பெற்று விண்ணப்பிக்க முடியும் என கலாசார மத்திய நிலைய பொறுப்பதிகாரி பொ.சிவராஜசிவம் (0772478017) கேட்டுக்கொண்டுள்ளார்.