கஜன்களிடமும் தீவிர விசாரணை

download 2 12
download 2 12

தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் யாழ்.மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் மற்றும் அக்கட்சியின் பொதுச்செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான செல்வராசா கஜேந்திரன் ஆகியோரிடம் கிளிநொச்சிப் காவற்துறையினர் நேற்று வாக்குமூலம் பதிவு செய்தனர்.

நீதிமன்றத் தடையை மீறி பொத்துவில் தொடங்கி பொலிகண்டி வரையான மக்கள் எழுச்சிப் போராட்டத்தில் இருவரும் பங்கேற்றனர் எனக் கூறியே இந்த வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டது.

இதேவேளை, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களான இராசமாணிக்கம் சாணக்கியன், தவராசா கலையரசன், செல்வம் அடைக்கலநாதன், எஸ்.வினோநோகராதலிங்கம், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களான பா.அரியநேத்திரன், சீனித்தம்பி யோகேஸ்வரன் ஆகியோரிடம் நீதிமன்றத் தடையை மீறி பேரணியில் பங்கேற்றமை தொடர்பில் காவற்துறையினர் வாக்குமூலங்களைப் பதிவு செய்திருந்தனர்.