சஹ்ரானின் போதனையில் பங்கேற்ற பெண்ணொருவர் ரி.ஐ.டியால் கைது!

1583741396 arrest women 2 1
1583741396 arrest women 2 1

உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பிரதான சூத்திரதாரியான சஹ்ரான் ஹாஷிமின் அடிப்படைவாதப் போதனைகளில் கலந்துகொண்ட பெண்ணொருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

மாவனல்லை பிரதேசத்தைச் சேர்ந்த 24 வயது பெண்ணே நேற்று இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளார்.

பயங்கரவாதத் தடுப்புப் பிரிவினர் இந்தக் கைது நடவடிக்கையை முன்னெடுத்தனர்.

ஈஸ்டர் தாக்குதலை மேற்கொண்ட சஹ்ரானின் அடிப்படைவாத வகுப்புகளில் கலந்துகொண்ட 6 பெண்கள் கடந்த டிசம்பர் மாதம் கைதுசெய்யப்பட்டிருந்தனர்.

நேற்று கைதுசெய்யப்பட்ட பெண்ணின் குடும்ப உறுப்பினர்கள் மாவனல்லை புத்தர் சிலை உடைப்பு சம்பவத்தில் ஏற்கனவே கைதுசெய்யப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.