நிதி மோசடி செய்தவரிற்கு 367 வருட சிறை தண்டனை!!

Judgment
Judgment

தனியார் நிறுவனத்திற்குச் சொந்தமான 21 இலட்சத்திற்கும் அதிகமான பணத்தினை மோசடி செய்த குற்றச்சாட்டில் நிறுவனத்தின் கணக்காய்வாளரிற்கு 367 வருட கடூழிய சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி சஷீ மகேந்திரனினால் நேற்றைய தினம் (Dec.06) தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

அத்துடன், 21 இலட்சம் ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.
குறித்த நபர் தலைமறைவாகியுள்ள நிலையில் அவரை கைதுசெய்யுமாறு பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

2000 – 2001 ஆம் ஆண்டு காலப்பகுதியில் இந்த நிதிமோசடி இடம்பெற்றதாக சட்ட மா
அதிபரால் கொழும்பு மேல் நீதிமன்றில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டிருந்தமை
குறிப்பிடத்தக்கது.