வவுனியாவில் நீண்ட காலமாக அரச மற்றும் தனியார் போக்குவரத்து துறையினரிற்கிடையில் நிலவி வருகின்ற பிரச்சினைகளை தீர்ப்பதற்கான நடவடிக்கை மேற்கொண்டுள்ளார்.
வவுனியாவிற்கு நேற்றைய தினம் விஜயத்தினை மேற்கொண்டு அரச மற்றும் தனியார் போக்குவரத்து ஊழியர்களுடன்சந்திப்பினை மேற்கொண்டிருந்தார்.
இதன்போது, புதிய பேருந்து நிலையம் அமைக்கப்பட்டதையடுத்து அரச மற்றும் தனியார் பேருந்துகளுக்கிடையிலான நேர அட்டவணையில் ஏற்பட்ட குழப்பம் காரணமாக இரண்டு தரப்பினருக்குமிடையில் முரண்பாடு ஏற்பட்டுள்ளதாக தனியார் போக்குவரத்து சங்கப் பிரதிநிதிகள் தெரிவித்துள்ளனர்.
இவர்களுடனான பேச்சுவார்த்தையினையடுத்து ஏற்பட்டுள்ள பிரச்சினைகளை தீர்க்கும் முகமாக எதிர்வரும் திங்கட் கிழமை வவுனியா மாவட்ட செயலகத்தில் கலந்துரையாடலுக்கு ஏற்பாடு செய்யுமாறு வவுனியா அரசாங்க அதிபருக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.