நாட்டில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட மேலும் 205 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
இராணுவ தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா இதனை குறிப்பிட்டுள்ளார்.
இதற்கமைய கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 82855 ஆக அதிகரித்துள்ளது.
அத்துடன், இன்றைய தினம் மாத்திரம் 425 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
அதேபோல், கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட மேலும் 4018 பேர் சிகிச்சை நிலையங்களில் சிகிச்சை பெற்று வருவதாகவும் இராணுவ தளபதி தெரிவித்துள்ளார்.