நாட்டைப் பாதுகாக்க ஒட்டுமொத்த மக்களும் ஒன்று திரள வேண்டும்: ஜனாதிபதி வேண்டுகோள்!

9
9

நாட்டை நேசிக்கும் அரசியல்வாதிகள், அறிஞர்கள் மற்றும் மதத் தலைவர்கள் உள்ளிட்ட ஒட்டுமொத்த மக்களும், நாட்டையும் மக்களையும் பாதுகாப்பதற்கு, சரியானதொரு முடிவை துரிதமாக மேற்கொள்ள ஒன்று திரள வேண்டும் என ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நேற்று இடம்பெற்ற நாடாளுமன்ற உறுப்பினரான ஜனாதிபதி சட்டத்தரணி விஜயதாஸ ராஜபக்ஷவினால் எழுதப்பட்ட 3 நூல்கள் வெளியீட்டு விழாவில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

தற்போது நாடு முகங்கொடுத்துள்ள அரசியல், பொருளாதார, சமூக சவால்களை நோக்கும்போது மிக குறுகிய காலத்திற்குள் எவரும் எதிர்பார்க்காத மாபெரும் பாதாளத்தில் நாடு விழுந்துவிடும் என்றும் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.

இந்த சவாலிலிருந்து நாட்டை பாதுகாப்பதற்கு நாட்டை நேசிக்கும் ஒரு குழுவினாலேயே அந்த வீழ்ச்சியிலிருந்து நாட்டை காப்பாற்ற முடியும் என்றும் அவர் மேலும் தெரிவத்துள்ளார்.