ஏப்ரல் 21 தாக்குதலின் சூத்திரதாரியான தேசிய தௌஹீத் ஜமாத் அமைப்பின் தலைவர் சஹ்ரான் ஹஸீமின் மனைவியான அப்துல் காதர் பாத்திமாவிடம் நேற்று கொழும்பு கோட்டை நீதவான் ரங்க திஸாநாயக்க முன்னிலையில், சுமார் இரண்டு மணிநேரம் இரகசிய வாக்குமூலம் பெறப்பட்டுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
தற்போது குற்றப் புலனாய்வு பிரிவின் தடுப்பில் வைக்கப்பட்டுள்ள சந்தேகத்துக்குரியவரிடம், நீதிமன்றம் இதற்கு முன்னதாக இரண்டு சந்தரப்பங்களில் வாக்குமூலங்களைப் பதிவு செய்திருந்ததாகவும், அவர்களின் தடுப்பில் உள்ள சஹ்ரானின் நான்கு வயது மகளை, அவரின் மனைவியின் பெற்றோரிடம் பொறுப்பளிக்குமாறு கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றம் நேற்று முன்தினம் உத்தரவு பிறப்பித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.