5 கிலோ கிராம் ஆபத்தான வெடிமருந்துகள் மீட்பு!

IMG 20210308 WA0104
IMG 20210308 WA0104

யாழ்ப்பாண செம்மணி இந்து மயானத்தில் ஆபத்தான வெடிமருந்துகள் சுமார் 5 கிலோ கிராம் மீட்கப்பட்டன என்று காவல்துறையினர் தெரிவித்தனர்.

நல்லூர் – செம்மணி வீதியின் வடக்கே உள்ள இந்து மயானம் இன்று அதிகாலை சிறப்பு அதிரடிப் படையினரால் தேடுதலுக்கு உட்படுத்தப்பட்டது.

இன்று அதிகாலை இராணுவ புலனாய்வுப் பிரிவுக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் இந்து மயானத்தில் பை ஒன்றில் பொதி செய்யப்பட்ட நிலையில் ஆபத்தான வெடிமருந்துகள் கண்டறிப்பட்டது.

யாழ்ப்பாண நீதிவான் நீதிமன்றின் உத்தரவில் சிறப்பு அதிரடிப்படையினரால் மீட்கப்பட்டன.

3 கிலோ 750 மில்லி கிராம் சி4 மற்றும் ரிஎன்ரி வெடிமருந்துகள் டெட்டனேற்றர்கள் அதற்கான வயர்கள் என்பன மீட்கப்பட்டன என்று காவல்துறையினர் தெரிவித்தனர்.

வெடிமருந்துகள் மீட்கப்பட்டு நீதிமன்றில் ஒப்படைக்கப்பட்டுள்ளன.