கொழும்பு மற்றும் கம்பஹா மாவட்டங்களில் உள்ள முதியோர் இல்லங்களில் உள்ள முதியோர்களுக்கு கொரோனா தடுப்பூசி வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இன்று இடம்பெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் கலந்து கொண்டு பேசும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
தற்சமயம் கொரோனா தடுப்பூசிகள் பல்வேறு தரப்பினருக்கு வழங்கப்பட்டு வருகின்றன.
இதற்கிடையில் கல்வி பொதுத் தராதர சாதாரணதர பரீட்சை இன்றுடன் நிறைவடைந்த நிலையில் பரீட்சை எழுத சென்ற 62 மாணவர்களுக்கு கொரோனா தொற்றுறுதியாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.