பெரும்பான்மையை பெற்று இலகுவாக ஆட்சியமைப்போம்

akilaviraj
akilaviraj

எதிர்வரும் பாராளுமன்ற பொதுத் தேர்தலில் 113 பெரும்பான்மையை இலகுவாகப் பெற்று ஆட்சியமைப்போம் என ஐ.தே.கவின் பொதுச் செயலாளர் அகிலவிராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார்.

சிறிகொத்தாவில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது இதனை தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்;

பொதுத்தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில் ஐக்கிய தேசிய முன்னணியை பிரதிநிதித்துவப்படும் அனைவரும் ஒரே குரலில் கட்சியை முன்னோக்கி கொண்டு சென்றால் இலகுவாக 113 பெரும்பான்மையைப் பெற்றுக் கொள்ள முடியும்.

எனவே அனைத்து தலைவர்களும் ஒன்றிணைந்து இந்த பயணத்தில் செல்ல வேண்டும்.

சஜித் பிரேமதாச உள்ளிட்ட அனைவரையும் இணைத்து கொண்டு முன்னோக்கிய பாதையில் நாம் சென்று கொண்டிருக்கின்றோம்.

இதேவேளை பொதுத்தேர்தல் குறித்த தீர்மானங்களை மேற்கொள்வதற்கும் கட்சியின் தலைமைத்துவம் தொடர்பிலான தீர்மானங்களை மேற்கொள்வதற்கும் ஐ.தே.கவின் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவால் குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்திருந்தார்.