மறவன்புலோவில் காற்றாலை மின் உற்பத்தி நிலையம்??

ntc logistic
ntc logistic

தென்மராட்சி மறவன்புலோவில் காற்றாலை மின் உற்பத்தி நிலையம் அமைக்கும் பணிகள் மீள ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அறிய முடிகிறது.

கடந்த ஜூலை மாதம் மறவன்புலோவில் காற்றாலை மின் உற்பத்தி அமைக்கு பணிகள் ஆரம்பிக்கப்பட்ட போது உள்ளூர் மக்களின் எதிர்ப்பினால் அப் பணிகள் இடைநிறுத்தப்பட்டிருந்தன.

இந்நிலையில் புதிய அரசு ஆட்சிக்கு வந்த நிலையில் இந்திய திட்டங்களை விரைவுபடுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டது. அதில் ஒன்றாக மறவன்புலோவில் காற்றாலை மின் உற்பத்தி நிலையம் அமைக்கும் பணிகள் மீள ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

இந்தியாவின் பிரபல போக்குவரத்து நிறுவனமான நாமக்கல் போக்குவரத்து கம்பனியின் துணை நிறுவனமான என்.ரி.சி லொஜிஸ்டிக்ஸ் நிறுவனத்தால் காற்றாலை அமைப்பதற்கான உபகரணங்கள் கனரக வாகனங்கள் மூலம் யாழ்ப்பாணத்துக்கு எடுத்துவரப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது,