கூட்டமைப்பின் பங்காளிகளுக்கிடையில் பிளவு??

samapanthan
samapanthan

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் தமிழரசுக்கட்சி, புளொட், ரெலோ ஆகிய கட்சிகள் அங்கம் வகிக்கின்ற நிலையில் குறித்த பங்காளி கட்சிகளுக்கிடையில் பிளவு ஏற்படவில்லை என கூட்டமைப்பின் தலைவர் .இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் ரெலோ மற்றும், புளொட் ஆகிய கட்சிகள் தமது வகிபாகத்தினை உணர்ந்துள்ளதாகவும் இக்கட்சிகளுக்கும் தமிழரசுக்கட்சிக்குமிடையிலான பேச்சுவார்த்தை நடத்தியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

எந்தவொரு மாற்று அணியின் உருவாக்கமும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வலிமையையும் ஒருமைப்பாட்டையும் பலவீனப்படுத்தாது என கூட்டமைப்பின் தலைவர் தெரிவித்துள்ளார்.

கூட்டமைப்பிற்கு எதிராக உருவாக்கப்படுகின்ற மாற்று அணிகள் ஒரு போதும் எங்களுக்குச் சவாலாகவே இருக்காது.  இதேவேளை மாற்று அணிகள் எங்களுக்கு சவால் இல்லை எனவும், மாற்று அணி என்று சொல்லிக் கொண்டு வருபவர்களுக்கு தேர்தல்களில் மக்கள் சரியான பாடத்தைப் புகட்டுவார்கள் எனவும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினரும் பேச்சாளருமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் எந்த பிளவும் இல்லை என்றும், அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள தேர்தலில் புதிய உத்திகளுடன் கூட்டமைப்பு முன்னகரும் என்றும் தமிழ் அரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராசா அவர்களும் குறிப்பிட்டுள்ளார்.