மகாகவி பாரதியாரின் 133 ஆவது ஜனன தினம் இன்று புதன்கிழமை யாழில் அனுஷ்டிக்கப்பட்டது.
யாழ்ப்பாணத்திலுள்ள இந்திய துணை தூதரகத்தின் ஏற்பாட்டில் நல்லூரிலுள்ள பாரதியார் சிலை முன்பாக இந் நிகழ்வு நடைபெற்றது.
இதன் போது பாரதியாரின் சிலைக்கு மலர் மாலை அணிவிக்கப்பட்டு, மலர் தூவி அஞ்சலி செலுத்தப்பட்டு பாரதியார் பாடலும் இசைக்கப்பட்டிருந்தது.
இந் நிகழ்வில் இந்திய துணை தூதுவர். கே. பாலச்சந்திரன், யாழ் மாநகர முதல்வர் இமானுவேல் ஆர்னோல்ட், வட மாகாண அவைத் தலைவர் சீ.வீ.கே.சிவஞானம், யாழ் மாவட்ட அரச அதிபர் என்.வேதநாயகம் உட்பட பலரும் கலந்து கொண்டிருந்தனர்.