சபாநாயகர் கரு ஜயசூரிய தலைமையில் இன்றைய தினம் அரசியலமைப்பு சபை கூடவுள்ளது.
இந்த கூட்டத்திற்கு கடந்த அரசாங்கத்தின் அரசியலமைப்பு சபையில் அங்கம் வகித்த அனைவரும் பங்கேற்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
ஜனாதிபதி பதவியேற்றதன் பின்னர் முதலாவது அரசியலமைப்புச்சபையின் முதலாவது கூட்டத்தொடராகும்.
அரசியலமைப்புச்சபையில் எதிர்க்கட்சித்தலைவர் உள்ளடங்குகின்ற போதிலும் இதுவரை சஜித் பிரேமதாச எதிர்க்கட்சித் தலைவராக அறிவிக்கப்படாமையினால் அவர் நாளை பங்குபற்றுவது சந்தேகமே..