T20 தொடரை இந்தியா கைப்பற்றியது

T20 series
T20 series

இந்தியா – மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கு இடையிலான 3 போட்டிகள் கொண்ட T20 கிரிக்கெட் தொடரை இந்திய அணி கைப்பற்றியுள்ளது.

தொடரை தீர்மானிக்கின்ற 3வது போட்டி நேற்றைய தினம் மும்பையில் நடைபெற்றது.

நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற மேற்கிந்திய தீவுகள் களத்தடுப்பினை தீர்மானித்தது.

அதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய இந்திய அணி 20 ஓவர் நிறைவில் 3 விக்கட்டினை இழந்து 240 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.

இந்திய அணி சார்பில் ரோகித் சர்மா 71 ஓட்டங்களையும், கே.எல்.ராகுல் 91 ஓட்டங்களையும், விராட் கோலி 70 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுத்தனர்.

பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய மேற்கிந்திய தீவுகள் அணி 20 ஓவரில் 8 விக்கெட்டுக்கு 173 ஓட்டங்களை மாத்திரமே பெற்று 67 ஓட்டங்கள்ள் வித்தியாசத்தில் தோல்வியுற்றது.

துடுப்பெடுத்தாட்டத்தில் பொலார்ட் 68 ஓட்டங்களையும், ஹெட்மையர் 41 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுத்தனர்.

இந்த வெற்றியுடன் இந்திய அணி T20 தொடரை 2-1 என கைப்பற்றியது.

ஆட்டநாயகனாக கே.எல்.ராகுல் தெரிவு செய்யப்பட்டார்.