அரசியல் கட்சி ஒன்று வெற்றிப்பெற வேண்டுமானால் அந்த கட்சியின் தலைவர் தலைமைத்துவத்தில் முதிர்ச்சியடைந்திருக்க வேண்டும் என ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறப்பினர் வஜிர அபேவர்தன தெரிவித்துள்ளார்.
கட்சி பலவீனமடைந்துவிட்டால் அதன் எதிர்விளைவுகளை நாட்டு மக்கள் எதிர்க்கொள்ள வேண்டிய நிலைமை ஏற்படும் என அவர் தெரிவித்துள்ளார்.
கட்சியின் தலைமைத்துவம் என்பது பாராம்பரியமிக்கது எனவே அதனை பாதுகாக்க வேண்டுமென அவர் மேலும் வலியுறுத்தியுள்ளார்.