யாழ்ப்பாணம் நூலகத்தால் வாசிப்புமாத பரிசளிப்பு நிகழ்வு

20191212 120332
20191212 120332

ஆசியாவின் முக்கிய நூலகமான யாழ்ப்பாணம் நூலகத்தில் வாசிப்புமாதத்தை முன்னிட்டு வாசக மாணவர்களுக்கிடையில் நடத்தப்பட்ட போட்டியில் வெற்றியீட்டியோருக்கு பரிசு வழங்கும் நிகழ்வு இன்று காலை 9.00 மணியளவில் நூலகத்தின் பிரதான மண்டபத்தில் இடம்பெற்றது .

யாழ்மாநகர ஆணையாளர் தலைமையில் இடம்பெற்ற இந்த நிகழ்வில் யாழ்மாநகர மேஜர் ஆர்னோல்ட் உட்பட சபை உறுப்பினர்கள் பலரும் கலந்துகொண்டனர் .

நிகழ்வில் பல்கலைக்கழக விரிவுரையாளர் சர்வேஸ்வரா ,ஆணையாளர் திரு .ஜெயசீலன் .உறுப்பினர் திரு .செல்வவடிவேல் ஆகியோர் சிறப்புரையாற்றினார் .

வெற்றியீட்டிய மாணவர்களுக்கு கேடயங்களும் சான்றிதழ்களும் வழங்கி மதிப்பளிக்கப்பட்டதுடன் கலைநிகழ்வுகளும் இடம்பெற்றன .