காணாமல் போயிருந்த சிறுவனின் சடலம் மீட்பு!

m 32
m 32

சம்பூர் காவல்துறை பிரிவுக்குட்பட்ட இத்திக்குளம் பகுதியிலுள்ள குளத்தில் நீராட சென்றிருந்த நிலையில் முதலை இழுத்து சென்றமையை அடுத்து காணாமல் போயிருந்த சிறுவனின் சடலம் இன்று மீட்கப்பட்டுள்ளது.

இத்திக்குளம் பகுதியை சேர்ந்த 15 வயதான குறித்த சிறுவன் தமது நண்பர்கள் இருவருடன் நேற்று நீராட சென்றிருந்த நிலையில் காணாமல் போயிருந்தார்.

இதன்போது முதலை ஒன்று அவரை இழுத்து சென்றதாக அவரது நண்பர்கள் அயலவர்களிடம் தெரிவித்தமையை அடுத்து தேடுதல் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டன.

இந்தநிலையில் பிரதேசமக்கள், காவல்துறையினர் மற்றும் கடற்படையினர் இணைந்து முன்னெடுத்த தேடுதல் நடவடிக்கையின் போது அவரது சடலம் மீட்கப்பட்டுள்ளது.