மொஹமட் ஷாபியை விசாரிப்பதற்கு புதிய குழு

1 afi 2
1 afi 2

குருநாகல் போதனா வைத்தியசாலையின் பிரசவ மற்றும் பெண்ணியல் பிரிவின் வைத்தியர் மொஹமட் ஷாபி தொடர்பான விசாரணைகளை முன்னெடுப்பதற்கு புதிய குழுவொன்று நியமிக்கப்படவுள்ளதாக குற்றப்புலனாய்வு துறையினர் தெரிவித்துள்ளனர்.

வைத்தியர் ஷாபிக்கு எதிரான வழக்குகுருநாகல் நீதவான் நீதிமன்றில் இன்று (Dec.12) எடுத்துக்கொள்ளப்பட்டது.

இதேவேளை வைத்தியர் முஹமது ஷாபி தன்னிடம் சிகிச்சைக்கு சென்ற தாய்மாருக்கு திட்டமிட்டு கருத்தடை செய்தமை தொடர்பில் அவர் மீது வழக்கு தொடரப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.