அயோத்தி தீர்ப்பை எதிர்த்து தொடரப்பட்ட மனுக்கள் தள்ளுபடி

india high court
india high court

சர்ச்சைக்குறிய அயோத்தி வழக்கிற்குறிய தீர்ப்பு 9-11-2019 அன்று இந்திய உச்ச நீதிமன்றத்தினால் வழங்கப்பட்டிருந்த நிலையில் அதனை எதிர்த்து 18 சீராய்வு மனு தாக்கல் செய்யப்பட்டது.

சீராய்வு மனுக்கள் அனைத்தும் தலைமை நீதிபதி ஷரத் அரவிந்த் பாப்டே தலைமையிலான 5 நீதிபதிகள் கொண்ட அமர்வு முன்பு இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

இதில் அயோத்தி தீர்ப்பை சீராய்வு செய்யக்கோரி தாக்கல் செய்யப்பட்ட 18 சீராய்வு மனுக்களையும் தள்ளுபடி செய்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

அயோத்தியில் பிரச்சினைக்குரிய நிலத்தில் இராமர் கோவில் கட்டிக்கொள்ளவும், அதற்கான அறக்கட்டளை 3 மாதங்களுக்குள் உருவாக்கப்பட வேண்டும் என உச்ச நீதிமன்றம் அனுமதி வழங்கியிருந்தது.

மேலும், அங்கிருந்த மசூதி இடிக்கப்பட்டது சட்டவிரோதமானது, மசூதி கட்ட வேறு இடத்தில் 5 ஏக்கர் நிலம் வழங்கப்படவேண்டும் எனவும் உத்தரவிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.