திட்டமிட்ட குற்றச்செயல்களுடன் தொடர்புடைய பொடி லெசியின் உதவியாளர் ஒருவர் துப்பாக்கியுடன் கைது செய்யப்பட்டுள்ளார்.
காவல்துறை விசேட அதிரடிப்படையினரால் அஹங்கம பகுதியில் இன்று முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்பின் போதே அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேகநபர் இதற்கு முன்னர் இராணுவத்தில் சேவையாற்றியுள்ளதாக காவல்துறை ஊடகப் பேச்சாளர், பிரதி காவல்துறை மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.