இரட்டை குடியுரிமை வழங்குமாறு கோரிக்கை

mano
mano

இந்தியாவில் வாழும் இலங்கை தமிழ் அகதிகளுக்கு இரட்டைக்குடியுரிமை வழங்கப்பட வேண்டும் என தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான மனோகணேசன் தெரிவித்துள்ளார்.

இனமாற்றத்தின் காரணமாக இலங்கையில் தழர்களின் சனத்தொகை குறைவடைந்ததுள்ளது. இதுவே தமிழர்களின் போராட்டங்கள் தோற்று போனமைக்கு முதற்காரணம் என தெரிவித்துள்ளார்.

இவற்றில் நாட்டை விட்டு வெளியேறிய தமிழர்களில் மீண்டும் இலங்கைக்கு திரும்பி வரக்கூடிய நிலையில் இருப்பது இந்தியாவில் வாழும் இலங்கை அகதிகள் மாத்திரமே.

ஆகவே தமிழகத்தில் உள்ள இலங்கை தமிழ் அகதிகளுக்கு இரட்டை குடியுரிமை வழங்க வேண்டும் இந்திய அரசிடம் கோரிக்கை ஒன்றினை முன்வைத்துள்ளார்.