ஆரையம்பதி கிழக்கு திருநீற்றுக்கேணி குளத்திற்கருகில் நிர்மாணிக்கப்பட்டுள்ள மதகை முற்றாக உடைத்து நீர் வடிந்தோடக் கூடிய வகையில் சீர்செய்வதென தீர்மானிக்கப்பட்டுள்ளது.
கடந்த செவ்வாய்க்கிழமை (Dec.10) குறித்த இடத்திற்குச் சென்ற ஆரையம்பதி பிரதேச செயலாளர் திருமதி சத்தியானந்தி நமசிவாயம், காத்தான்குடி நகர சபை தவிசாளர் எஸ்.எச்.அஸ்பர் மற்றும் காத்தான்குடி நகர சபை உறுப்பினர்கள் உரிய இடத்திற்கு சென்று அதனை பார்வையிட்டிருந்தனர்.
இந்தக் குளத்தில் கட்டப்பட்டுள்ள மதகை உடைக்கக்கோரி நகர சபை தவிசாளர் தலைமையில் காத்தான்குடி பொதுமக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.