மலரும் மரநடுகை’ நிகழ்ச்சித் திட்டத்தின் மூலம் ஒட்டுசுட்டான் பிரதேசத்திற்குட்பட்ட ஒலுமடு தமிழ் வித்தியாலயம், மாங்குளம் கிராம சேவையாளர் அலுவலகம் உள்ளிட்ட பகுதிகளில் மரங்கள் நாட்டி வைக்கப்பட்டன.
மாங்குளம் தபாற்கந்தோர் அலுவலகம், ஒட்டுசுட்டான் சிவன் ஆலயம் என்பவற்றிலும் இருநூறுற்கு மேற்பட்ட மரக்கன்றுகள் நாட்டப்பட்டன.
நிகழ்வில் நிதி அனுசரணை வழங்கிய அமைப்பான அலும்னி உவோம்-99 (umni Uom-99) நிதி இணைப்பாளர் எஸ.லக்ஸ்மன், திட்ட இணைப்பாளர் எஸ்.நக்கீரன் மற்றும் கிளிநொச்சி மாவட்ட இளைஞர் கழக சம்மேளனத்தின் தலைவர் ரி.அஜந்தன் மற்றும் ஒட்டுசுட்டான் பிரதேச இளைஞர் கழக சம்மேளன உறுப்பினர்களும் கலந்து கொண்டிருந்தனர்.