தமிழ் புலம்பெயர் அமைப்புக்களுடன் தொடர்ந்தும் தமது உறவினை தொடரவுள்ளதாக ஐக்கிய அமெரிக்கா தெரிவிக்கின்றது.
இலங்கை அரசாங்கத்தினால் சில புலம்பெயர் அமைப்புக்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ள நிலையிலேயே அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் இந்த கருத்து வௌியாகியுள்ளது.
பிராந்தியங்களுடனான இணைப்பைப் பேண புலம்பெயர் சமூகங்கள் பாரிய ஒத்துழைப்பு வழங்குவதுடன் அவற்றை தமது மதிப்பு மிக்க பங்காளிகளாக கருதுவதாக அமெரிக்க இராஜாங்க திணைக்களம் கூறுகின்றது,
இலங்கையைச் சேர்ந்த புலம்பெயர் அமைப்புகள் உட்பட பல்வேறு தெற்காசிய புலம்பெயர் அமைப்புக்களுடன் தமது உறவை பேணி வருவதாக இராஜாங்க திணைக்களம் சுட்டிக்காட்டுகின்றது,
மேலும் பரஸ்பர நலன்கள் தொடர்பான தொடர்ச்சியான உரையாடல்களை புலம்பெயர் அமைப்புக்களுடன் முன்னெடுத்து வருவதாக அமெரிக்க இராஜாங்க திணைக்களம் குறிப்பிட்டுள்ளது