எஸ்.பீ., டிலான், விஜேமுனி ஆகியோருக்கு எதிராக விசாரணை!

4 dws
4 dws

கட்சியின் ஒழுக்கங்களை மீறிய சகலருக்கு எதிராகவும் ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாகவும் கட்சியின் ஒழுக்காற்றுக் குழு சம்பந்தப்பட்டவர்களது குற்றச்சாட்டுக்களுக்கு ஏற்ப வித்தியாசமான தீர்மானங்களை எடுக்கும் எனவும் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் சிரேஸ்ட உப தலைவர் பேராசிரியர் ரோஹண லக்ஸ்மன் பியதாச தெரிவித்துள்ளார்.

எஸ்.பீ. திஸாநாயக்க, டிலான் பெரேரா, விஜித் விஜேமுனி சொய்சா உட்பட கட்சியின் சட்டங்களை மீறிய பாராளுமன்ற உறுப்பினர்கள் சகலருக்கு எதிராகவும் ஒழுக்காற்று விசாரணை முன்னெடுக்கப்படவுள்ளது.

இவர்களுக்கு எதிரான ஒழுக்காற்று விசாரணை இவ்வார இறுதியில் நிறைவடையும் எனவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.