விஜேதாச ராஜபக்சவின் மகன் ஒரு இலட்சம் ரூபா சரீர பிணையில் விடுதலை!

bail 2
bail 2

கைது செய்யப்பட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் விஜேதாச ராஜபக்சவின் மகன் ரகித ராஜபக்ச கொழும்பு நீதிவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டதை அடுத்து ஒரு இலட்சம் ரூபா சரீர பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

நேற்றிரவு வெலிகடை பிரதேசத்தில் ஏற்பட்ட விபத்தில் 4 பேரை காயமடைய செய்த சம்பவம் தொடர்பில் அவர் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை பேச்சாளர் பிரதி காவல்துறை மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்திருந்தார்.

இவ்விபத்தின் பின்னர் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் வெலிகடை காவல்துறையினரால் அவர் கைது செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.