தமிழீழ விடுதலைப் புலிகளின் தயாரிப்பிலான வெடிபொருட்கள் பொலிகண்டியில் மீட்கப்பட்டுள்ளன என்று வல்வெட்டித்துறை காவற்துறையினர் தெரிவித்தனர்.
இன்று சனிக்கிழமை பொலிகண்டி புதுவளவு என்ற இடத்திலேயே இந்த வெடிபொருட்கள் மீட்கப்பட்டுள்ளன.
வெடிபொருள்களை செயலிழக்க வைப்பதற்கான தொழில்நுட்பத் திறன் தொடர்பில் கண்டறியப்படாத நிலையில் சிறப்பு அதிரடிப்படையின் உயர்மட்டப் பிரிவுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. அவர்களின் வருகைக்காக காத்திருப்பதாகவும் வல்வெட்டித்துறை காவற்துறையினர் குறிப்பிட்டனர்.