இலங்கை தமிழரசுக்கட்சியின் ஸ்தாபகத்தலைவர் தந்தை செல்வாவின் 44 ஆவது நினைவு தினம் மட்டக்களப்பில் இன்று அனுஷ்டிக்கப்பட்டது.
மட்டக்களப்பு நகரில் உள்ள நினைவுப்பூங்காவில் அமைந்துள்ள தந்தை செல்வாவின் உருவச்சிலைக்கு மலர் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தப்பட்டது.
கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக உரிய சுகாதார கட்டுப்பாடுகளுடன் இந்த நினைவு தின நிகழ்வுகள் இடம்பெற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்போது, இலங்கை தமிழரசுக்கட்சியின் சிரேஷ்ட உபதலைவரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான பொன்.செல்வராஜா தமிழ் தேசிய கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்களான இரா.சாணக்கியன், கோவிந்தன் கருணாகரன் உள்ளிட்ட பலர் பங்கேற்றிருந்தனர்.