புதிய சபை முதல்வர் தொடர்பாக அவதானம் செலுத்தும் மஹிந்த தரப்பு

paralumanram
paralumanram

பிரதமர் மகிந்த ராஜபக்ச தமையிலான ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுடன் இணைந்து செயற்படும் கட்சித்தலைவர்கள் கூட்டம் ஒன்று இடம்பெறவுள்ளது.

கொழும்பு விஜயராம மாவத்தையில் அமைந்துள்ள பிரதமரின் உத்தியோகபூர்வ இல்லத்தில்17.12.2019 நாளை(செவ்வாய்கிழமை) இந்த கூட்டம் இடம்பெறவுள்ளது.

இதன்போது, ஆளுங்கட்சியின் பிரதான அமைப்பாளர் மற்றும் சபை முதல்வர் நியமனம் தொடர்பாக அவதானம் செலுத்தப்படவுள்ளதாக கூறப்படுகின்றது.

இந்தநிலையில் குறித்த கூட்டத்தில் பங்கேற்குமாறு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுடன் இணைந்து செயற்படும் கட்சித்தலைவர்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றமைகுறிப்பிடத்தக்கது.