சுவிஸ் அதிகாரி கடத்தல்- குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தில் மீண்டும் ஆஜர்

0 aa
0 aa

கடத்தப்பட்டதாக கூறப்படும் சுவிஸ் தூதரக அதிகாரி இன்றைய (Dec.16) தினம் மீண்டும் குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் ஆஜராகியுள்ளார்.

பல்வேறு சந்தர்ப்பங்களில் குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் முன்னிலையாகி வாக்குமூலம் வழங்கியதுடன், இறுதியாக அவர் கடந்த சனிக்கிழமை வாக்கு மூலம் வழங்கியிருந்தார்.

அவர் தொடர்பான வழக்கு விசாரணை நாளைய தினம் நீதிமன்றில் இடம்பெறவுள்ளது.

குறித்த அதிகாரியிடம் முழுமையாக விசாரணை இதுவரை நடத்தப்பட்டு முடிவடையவில்லை என குற்றப்புலனாய்வு திணைக்கம் தெரிவித்துள்ளது.