தேசிய டெங்கு நோய் ஒழிப்பு பிரிவின் தகவல்!

1 g
1 g

இவ்வருடத்தின் (2019) கடந்த பதினொன்றரை மாத காலப் பகுதியில் நாட்டில் 90 ஆயிரம் பேருக்கு டெங்கு நோய் தொற்றியுள்ளதாகவும், அவர்களில் 100 பேர் மரணித்துள்ளதாகவும் தேசிய டெங்கு நோய் ஒழிப்புப் பிரிவின் பணிப்பாளர் அருண ஜயசேகர தெரிவித்துள்ளார்.

இதுவரையில் அதிகமான டெங்கு நோயாளர்கள் மேல் மாகாணத்திலும், யாழ். மாவட்டத்திலுமே பதிவாகியுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் பெய்து வரும் மழையின் காரணமாக டெங்கு நோய் தீவிரமாக பரவி வருவதாகவும் மக்கள் அவதானமாக இருக்குமாறும் அவர் மேலும் கேட்டுள்ளார்.