பொதுத் தேர்தல் சின்னம் குறித்து பிரசன்ன கருத்து

1 nu
1 nu

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி எதனைக்கூறினாலும் நாம் எதிர்வரும் பொதுத் தேர்தலில் மொட்டுச் சின்னத்திலேயே போட்டியிடுவோம் என அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.

எதிர்வரும் பொதுத் தேர்தலில் போட்டியிடுவதற்கு எத்தகைய கூட்டணியை அமைத்தாலும் மொட்டு சின்னத்திலேயே பொது ஜன பெரமுன போட்டியிடும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

கட்சித் தலைவர்களுடன் எத்தகைய உடன்படிக்கைகளை செய்துகொண்டாலும் மக்களுக்கு அவர்களுடன் ஏற்படுத்திக்கொண்டுள்ள உடன்படிக்கையே முக்கியமாகிறது. எவருடனும் அல்லது எந்தக் கட்சியுடனும் உடன்படிக்கை செய்துகொண்டாலும் மக்கள் எதிர்பார்ப்பு என்னவென்பதை தெரிந்துகொண்டே அதற்கிணங்க செயற்படவேண்டும்.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி எதனைக்கூறினாலும் நாம் எதிர்வரும் பொதுத் தேர்தலில் மொட்டுச் சின்னத் திலேயே போட்டியிடுவோம் என்றும் அவர் மேலும் கூறியுள்ளார்.

அத்தனகல்ல தேர்தல் தொகுதியில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி 27 கட்சிகளுடன் உடன்படிக்கை செய்துகொண்டுள்ளதாகவும், அந்த உடன்படிக்கைக்கிணங்க எதிர்வரும் பொதுத் தேர்தலில் நாற்காலி சின்னத்திலேயே போட்டியிட வேண்டுமென்றும் ஸ்ரீ ல.சு.க.யின்  பொதுச் செயலாளர் தயாசிறி ஜயசேகர தெரிவித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.