பொலிஸாரினால் மேற்கொள்ளப்பட்டசுற்றிவளைப்பின் போது 340 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
குறித்த சுற்றிவளைப்பு சம்பவம் நேற்று(ஞாயிற்றுக்கிழமை) மேல்மாகாணத்தில் இடம்பெற்றது
ஏற்கனவே கைது செய்வதற்கான உத்தரவு பிறப்பிக்கப்பட்டு, கைது செய்யப்படாமல் இருந்த சந்தேக நபர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கைது செய்யப்பட்டுள்ள சந்தேக நபர்களை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துவதற்குரிய நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.