‘பெரியண்ணன்’ மனநிலை இருக்கக் கூடாது – ஐங்கரநேசன்

1 ult 1
1 ult 1


தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு மாற்று என்பது அதிலும் சிறப்பாக ஒரு மேலெழுந்த கட்சியாக இருக்க வேண்டும் என க.வி.விக்னேஸ்வரனிடம் தெரிவித்தாகவும் ஆனால் அதற்கான பதில் முதலமைச்சர் தரப்பிலிருந்து இன்னும் கிடைக்கவில்லை என்று வட மாகாண முன்னாள் அமைச்சர் ஐங்கரநேசன் அவர்கள் தமிழ்க் குரலின் அறிவாயுதம் நிகழ்ச்சிக்கு வழங்கிய நேர்காணலில் தெரிவித்துள்ளார்.


விக்னேஸ்வரன் தலைமையிலான புதிய கூட்டணி தொடர்பான கேள்வி ஒன்றிற்குப் பதிலளித்த தமிழ்த் தேசியப் பசுமை இயக்கத்தின் தலைவர் பொ.ஐங்கரநேசன்,இதுவரை புதிய கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் கட்சிகள், அதன் யாப்புத் தொடர்பான எந்தப் பேச்சுவார்த்தையும் நடைபெறவில்லை என்றார்.

அத்துடன் அமையப்போகும் புதிய கூட்டானது பெரியண்ணன் ரீதியில்  முடிவெடுக்கக் கூடிய நிலை இல்லாமல் எல்லோரும் கலந்த முடிவெடுக்க் கூடிய கட்டமைப்பு உருவாக்கப்படுமாக இருந்தால் அந்தக் கூட்டில் இணைவதைப் பரிசீலிப்போம் எனத் தெரிவித்தார்.

 தமிழ்த் தேசியப் பசுமை இயக்கத்தின் தலைவர் பொ.ஐங்கரநேசன் அவர்கள் தமிழ்க் குரலுக்கு வழங்கிய முழுமையான நேர்காணல்: