மஹிந்த ராஜபக்ஸவிடம் பாடம் படிக்க வேண்டும்

1 t 1
1 t 1

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர்கள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஸவிடம் பாடம் படித்துக் கொள்ள வேண்டும் என அக்கட்சியின் பிக்குகள் அமைப்பு தெரிவித்துள்ளது.

நேற்று  ஐக்கிய தேசிய பிக்குகள் அமைப்பு ஏற்பாடு செய்யப்பட்ட ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையில் அவ்வமைப்பின் பிக்குகள் இதனைக் குறிப்பிட்டனர்.

கடந்த 2015 ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் தோல்வியடைந்த மஹிந்த ராஜபக்ஸ அலரிமாளிகையிலிருந்து நேரடியாக மக்களையே சந்தித்தார். அவரது பிரச்சார நடவடிக்கைகள் மறுநாள் ஆரம்பமாகியது.

ஆனால், ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர்களை ஜனாதிபதித் தேர்தலின் பின்னர் இதுவரை மக்கள் மேடைகளில் காண முடியாதுள்ளதாகவும் தேரர்கள் சுட்டிக்காட்டினர். வெற்றி தோல்வி என்பது ஒரு பொதுவான அம்சம் எனவும், தனக்கு வாக்களித்த மக்களை மறந்து ஒதுங்கிவிடுவது தலைவர்களுக்கு முன்மாதிரியல்லவெனவும் அவர்கள் சுட்டிக்காட்டினர்.