வடக மாகாணத்திற்கு ஆளுநர் ஒருவரை நியமிப்பதில் ஜனாதிபதி திணறிக் கொண்டிருப்பதாகவும் முதலில் வட மாகாணத்திற்கான ஆளுநரை நியமிக்குமாறு தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் தெரிவித்துள்ளார்.
வட மாகாண நிருவாக செயற்பாடுகளை முறையாக கொண்டு செல்ல முடியாத சூழ்நிலை காணப்படுவதாகவும் அதற்கான ஆளுநர் நியமனம் விரைவில் இடம்பெற வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார்.
இந்நிலையில் வட மாகாண ஆளுநர் நியமனத்தில் கூட்டமைப்பு ஒருவரை பரிந்துரை செய்ததாகவும் அதனை ஜனாதிபதி ஏற்றுக்கொள்ள மறுப்பதாகவும் தெரிவிக்கப்படுவதை மறுத்துள்ளார்.