காணமலாக்கப்பட்டவர்களுக்கான இறப்புச்சான்றிதழ் வழங்குவது தொடர்பில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்த கருத்திற்கு காணாமலாக்கப்பட்ட உறவுகள் தமது கண்டனத்தை தெரிவித்துள்ளது.
வவுனியா வீதி அபிவிருத்தி திணைக்களத்திற்கு முன்பாக கடந்த 1032 நாட்களாக தொடர்ச்சியாகப் போராடி வரும் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களினால் இன்றைய தினம் ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.
இது ஒரு பெளத்த சிங்கள நாடு என்ற கோசம்தான் இன்று இலங்கையில் மாபெரும் தமிழ் இனப்படுகொலையை நிகழ்த்தி முடித்திருக்கிறது. சிங்கள இனவாத அமைப்புக்களை கைது செய்ய வேண்டுமே தவிர சீ.வி.விக்னேஸ்வரன் ஐயாவை அல்ல என உறவுகள் தெரிவித்தனர்.
இதன் மூலம் நாங்கள் ஒற்றையாட்சிக்குள் இவர்களோடு சேர்ந்து வாழ முடியாது, தமிழ்த் தேசமாக சுயநிர்ணய உரிமையோடு பிரிந்து செல்வதுதான் தமிழ் பேசும் மக்களுக்கு நிரந்தர பாதுகாப்பையும், இனப்பிரச்சினைக்கு தீர்வையும் பெற்றுத்தரும் என காணாமலாக்கப்பட்ட உறவுகள் தெரிவித்துள்ளனர்.