2 மாவட்டங்களில் 3 கிராம சேவகர் பிரிவுகள் தனிமைப்படுத்தப்பட்டன!

thanimai 1
thanimai 1

நாட்டில் 2 மாவட்டங்களைச் சேர்ந்த 3 கிராம சேவகர் பிரிவுகள் உடன் அமுலாகும் வகையில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவ தளபதி சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

இதற்கமைய, கம்பஹா மாவட்டத்தில் துனுகலபிட்டி காவல்துறை அதிகாரப் பிரிவிற்குட்பட்ட கபுகொட கிராம சேவகர் பிரிவின் செபஸ்தியன் வீதி முதல் தெபடிஸ் வீதி வரை, பிட்டிபன லெல்லம (வடக்கு பிட்டிபன) கிராம சேவகர் பிரிவு ஆகியன தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.

ஹம்பாந்தோட்டை மாவட்டத்தில் அங்குனகொலபெலஸ்ஸ காவல்துறை அதிகாரப் பிரிவிற்குட்பட்ட ரொட்டே கிராம சேவகர் பிரிவு தனிமைப்படுத்தப்பட்டுள்ளது.