இம்மாத இறுதியில் உயர்தர பரீட்சை பெறுபேறுகள் வெளியீடு

al results
al results

ஓகஸ்ட் மாதம் நடைபெற்று முடிந்த கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை பெறுபேறுகள் இம்மாத இறுதியில் வெளியிடப்படும் என பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

பரீட்சை பெறுபேறுகள் தொடர்பிலான இறுதிக்கட்ட பணிகள் நிறைவடைந்துள்ள நிலையில் நத்தார் பண்டிகையின் பின்னர் பெறுபேறுகளை வெளியிடுவதற்கு தீர்மானித்துள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் தெரிவித்துள்ளார்.