மடு வனப்பகுதியில் துப்பாக்கியுடன் ஒருவர் கைது

6 hu
6 hu

மன்னார் – முருங்கன் – மடு வனப்பகுதியில் மிருக வேட்டையில் ஈடுபபட்டுகொண்டிருந்த நபர் ஒருவர் நேற்றைய தினம் கைத்துப்பாக்கியுடன் கைது செய்யப்பட்டுள்ளார் என பறையனாளங்குளம் காவல் துறையினர் தெரிவித்தனர்.

கைது செய்யப்பட்ட நபரிடம் காணப்பட்ட சில விலங்குகளின் இறைச்சிகள் மற்றும் கைத்துப்பாக்கி ஆகியன பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சந்தே நபர் தடுத்து வைக்கப்பட்டுள்ள நிலையில் காவல் துறையினர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.